தெற்கு அதிவேக வீதியில் கோர விபத்து : தூக்கி வீசப்பட்ட பெண் பலி

0
773
southern expressway accident

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பத்தேகம பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். (southern expressway accident)

அதிவேகமாக சென்ற வாகனம் பத்தேகமவுக்கு வெளியேறும் பகுதிக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது போது பலமுறை புரண்டு சென்றுள்ளதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது வாகனத்தில் சென்றவர்கள் ஆசனப்பட்டி அணிந்திருக்கவில்லை எனவும் இதன் காரணமாகவே பெண் தூக்கியெறியப்பட்ட நிலையில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

மேலும் சம்பவத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு பெண்ணும் சாரதியும் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுக்க வெரகல பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நதீசா பெரேரா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:southern expressway accident,southern expressway accident,southern expressway accident,