மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு அனுமதித்த தாய் பிணையில் விடுவிப்பு

0
636
 Mother allowed daughter sexually abused

தனது 15 வயதான மகளை பாலியல் வன்கொடுமைக்கு அனுமதித்த குற்றத்திற்காக மீகொடை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தாய் ஒருவரை ஹோமாகமை நீதவான் 2 இலட்சம் ரூபா பிணையில் விடுவித்துள்ளார். (Mother allowed daughter sexually abused)

இதுபோன்ற குற்றச் செயல்கள் மற்றும் கஞ்சா வைத்திருத்தல் தொடர்பாகவும் குறித்த தாய் மீது பொலிஸில் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாயினால் வன்கொடுமைக்கு அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமி சிறு குழந்தையுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.

இவர்களை பொரள்ளை இரட்சிப்பு இராணுவத்தின் பாதுகாப்பில் தங்க வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த குழந்தையின் தகப்பனான நபர், இதற்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Mother allowed daughter sexually abused