விஜயகலா கூற்றில் உண்மையுள்ளது! ஒப்புக்கொண்ட மஹிந்த ராஜபக்ஷ!

0
919

விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த விடயத்தின் பின்னணியில் சொல்லப்படாத ஒரு உண்மை இருப்பதாகவும், அரசாங்கம் தமிழ் மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகள் எவற்றையும் நிறைவேற்றவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். Mahinda Rajapaksa Accepts Vijayakala Maheswaran Statement

முதியங்கன ரஜமகாவிகாரைக்கு நேற்று (09.07.2018) விஜயம் செய்திருந்த மஹிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன் விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டும் என கூறிய விடயம் பிழையானது எனவும் அதற்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ‘விஜயகலாவின் கூற்றில் சொல்லப்படாத உண்மைகள் இருப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கம் தழிழ் மக்களுக்கு போலியான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றிவிட்டது என்பதையே விஜயகலாவின் கருத்து தெளிவாக தெரிவிப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமன்றி அரசாங்கத்தின் இயலாமையினாலேயே நாட்டில் கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் இதன் போது முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites