யாழ்ப்பாணத்தில் வீடு ஒன்றிற்குள் புகுந்து பாரிய நட்டத்தை ஏற்படுத்திய ஆவா குழுவின் பிரபல உறுப்பினர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Jaffna Police Arrested Chunnakam Ava Group
சுன்னாகம் பொலிஸ் பிரிவில் ஒரே நாள் இரவில் 3 வீடுகளுக்குள் புகுந்த ஆவா குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்திவிட்டு தப்பி சென்றமை, அதற்கு அடுத்த நாள் நபர் ஒருவருக்கு தாக்குதல் மேற்கொண்டமை மற்றும் சொத்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியமை ஆகிய சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதற்கமைய மேற்கொண்ட தேடுதலில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
28 வயதுடைய நாகலிங்கம் தயாகரன், 20 வயதுடைய பஞ்சலிங்கம் கிருஷன், 22 வயதுடைய சுதாகரன் தவரூபன் மற்றும் 23 வயதான நடராஜா மதுஷன் என்பவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் இன்று மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பாலியல் சித்திரவதைக்குள் ஈழ அகதிகள்; அமெரிக்கா அதிர்ச்சித் தகவல்
- சமூக ஒற்றுமையே பலமான ஆயுதம்; சதிகளை முறியடிப்போம்
- யாழில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன்; இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்
- வவுனியாவில் தொடரும் வாள்வெட்டு; 10 பேர் கைது
- பாடசாலை செல்ல மாட்டோம்; கால்களை ப்ளேட்டால் வெட்டிய மாணவர்கள்
- ஆற்றுப் பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு; நோர்வூட்டில் பதற்றம்
- பெண் பொலிஸின் கையை கடித்த கிராம சேவகர்
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்