மூன்று பாடசாலை மாணவிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை

0
581
father three school students abused

பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த மூன்று மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் பேரில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். (father three school students abused)

41 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையையே சந்தேகத்தின் பேரில் கலஹா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தெல்தோட்டை மலை மகள் வித்தியாலயத்தில் கல்விகற்கும் 13 வயதான இரு மாணவிகளும், 11 வயதான மாணவி ஒருவரும் பாடசாலைக்கு செல்வதற்காக சிறிய பாதை ஒன்றினூடாகச் சென்றுகொண்டிருந்தனர்.

இதன்போது, குறித்த பாதையில் மறைந்திருந்த சந்தேக நபர், குறித்த மாணவிகள் மூவரையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த சிறுமிகள் கூக்குரல் இடவே, அக்கம் பக்கதில் இருந்தவர்கள் இந்தச் சிறுமிகளை மீட்டதுடன், சந்தேக நபரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அத்துடன், குறித்த சிறுமிகள் வைத்தியப் பரிசோதனைக்காக கலஹா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரை நாளைய தினம் கண்டி நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கலஹா பொலிஸின் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; father three school students abused