ரிவால்வர், ஹெரொயின் மற்றும் வெடிபொருட்களுடன் மூவர் கைது! : களனி பகுதியில் சம்பவம்

0
561
three suspects arrested kelaniya news Tamil

களனி – எந்தாரமுல்லை பகுதியில் வெளிநாட்டு ரிவால்வர் ஹெரொயின் மற்றும் வெடிபொருட்கள் வைத்திருந்த மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். three suspects arrested kelaniya news Tamil

களனி பொலிஸ் சட்ட அமுலாக்கல் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு ரிவால்வர், உயிர்ப்பு நிலையிலிருந்த 5 வெடிபொருட்கள், 18.86 கிராம் ஹெரொயின், 5 கைத்தொலைபேசிகள், ஒரு இலத்திரனியல் தராசு மற்றும் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பணம் என்பவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் கடவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வத்தளை மற்றும் கடவத்தை பிரதேசங்களை சேர்ந்த 32 மற்றும் 30 வயதானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (09) மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

three suspects arrested kelaniya news Tamil, three suspects arrested kelaniya news Tamil, three suspects arrested kelaniya news Tamil