ரணிலை பின் தொடர்ந்தால் அர்­ஜுன மகேந்­தி­ரனை கைது செய்யலாம்! சுனில் ஹந்துநெத்தியின் அதிரடி திட்டம்!

0
642
Peoples Liberation Front people Sri Lanka claim paying large taxes

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பின் தொடர்ந்து சென்றால் அர்­ஜுன மகேந்­தி­ரனை கைது செய்ய முடியும் என மக்கள் விடுதல‍ை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார். JVP MP Sunil Handunnetti Plan Arrest Arjuna Mahendran

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

“அர்­ஜுன மஹேந்­தி­ரனை மீண்டும் இலங்­கைக்கு கொண்­டு­வர பிர­தமர் சிங்கப்பூர் போகவில்லை. எனினும் அர்­ஜுன மஹேந்­திரன் எங்கு ஒளிந்­துள்ளார் என்­பதை தெரிந்­து­கொள்ள வேண்டும் என்றால் பிர­தமர் பின்னால் ஒருவர் பின்­தொ­டர்ந்தால் அவரை பிடிக்க முடியும். ஊடகங்­களும் அதனை செய்ய முடியும். அப்­போது அவரை கண்­ட­றிய முடியும். சில­வே­ளை­களில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ உத­யங்க வீர­துங்­கவை வர­வ­ழைப்­ப­தாக கூறி­யதை போன்று பிர­தமர் அர்­ஜுன மஹேந்­தி­ரனை வர­வ­ழைக்க சென்­றாரோ தெரி­ய­வில்லை. நீ உத­யங்­கவை வர­வ­ழைத்தால் என்னால் அர்­ஜு­ன­வையும் வர­வ­ழைக்க முடியும் என்ற நேரடி சவால் ஏதும் உள்­ளதா என்­பதும் தெரி­ய­வில்லை.

தேசிய கணக்­காய்வு சட்­டத்தை பல­வீ­ன­ப்ப­டுத்­திய பிர­தான பொறுப்பு பிர­தமர் ரணில் விக்கிரமசிங்­க­வையே சாரும். ஊழல் வாதி­களை காப்­பாற்ற, ஊழலை மறைக்க பிர­தம அமைச்­சரும் ஏனைய அமைச்­சர்­களும் இணைந்து சூழ்ச்சி செய்­து­விட்­டனர். அமைச்­சர்­களின் தேவைக்­காக அரச அதி­கா­ரிகள் செய்யும் தவ­று­களை இன்று அமைச்­சர்கள் காப்­பாற்­று­கின்­றனர். ” என கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites