டென்னீஸ்வரனுக்கு வழங்கிய தீர்ப்பினை இடைநிறுத்துமாறு விக்கினேஸ்வரன் ரிட் மனு தாக்கல்

0
482
vickneshwaran apply again tenniswaran judgement today

பா டென்னீஸ்வரன் தொடர்பில்; வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவினை இடைநிறுத்த கோரி முதலமைச்சர் சி வி விக்கினேஷ்வரனால் ஏவல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. vickneshwaran apply again tenniswaran judgement today

வட மாகாண அமைச்சராக கடமையாற்றிய டென்னீஸ்வரனை அமைச்சு பதவியிலிருந்து நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

தன்னை அமைச்சு பதவியிலிருந்து நீக்கியமையானது சட்டவிதிகளுக்கு முரணான செயல் என தெரிவித்து அவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கினை விசாரணை செய்து வந்த உச்ச நீதிமன்றம் டென்னீஸ்வரனே தொடர்ந்து அமைச்சராக இருப்பார் என தெரிவித்து கடந்த ஜுன் மாதம் 28 ஆம் திகதி இடைக்கால உத்தரவினை பிறப்பித்திருந்தது.

இந்த உத்தரவினை இடைநிறுத்தி வைக்குமாறே சி வி விக்கினேஷ்வரன் ஏவல் (ரிட்) மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் நாளை தினம் பா டென்னீஸ்வரன் தொடர்பான வழக்கு நாளைய தினம் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
vickneshwaran apply again tenniswaran judgement today

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites