வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது

0
503
Two arrested foreign currency notes

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 64 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர். (Two arrested foreign currency notes)

கம்பஹா பகுதியைச் சேர்ந்த இருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூருக்கு பயணிக்க இருந்த போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து பவுன்ட்ஸ், சவூதி ரியால் மற்றும் யூரோ நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த வெளிநாட்டு நாணயங்கள் அரச உடைமையாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Two arrested foreign currency notes