(tamilnews mahinda president election ctb payment arias)
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு செலுத்த வேண்டிய 140 மில்லியன் ரூபா நட்டத்தை மீளப் பெற்றுத் தருமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பிரதிவாதி தரப்பு பதில் வழங்குவதற்கு கொழும்பு வணிக மேல் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பாக பதில் வழங்குவதற்கு அவகாசம் வழங்குமாறு பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளின் படி நீதிமன்றம் அறிவித்தலை விடுத்துள்ளது.
அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்கு முன்னர் எழுத்துமூலம் பதில் வழங்குமாறு பிரதிவாதிகள் தரப்புக்கு நீதிமன்றம் அறிவித்தது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்களை பயன்படுத்தியதன் மூலம் ஏற்பட்ட நட்டத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பஸ்களை தேர்தல் பணிகளுக்காக பயன்படுத்தியதன் மூலம் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு 140 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(tamilnews mahinda president election ctb payment arias)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விஜயகலாவின் புலிகள் கருத்து தொடர்பில் ஞானசார தேரரின் அதிரடி பேச்சு
- பிரபலம் தேடும் முயற்சியில் சிலர் என்மீது வழக்கு தொடுக்கின்றனர் – மணிவண்ணன்
- பாடசாலை மாணவர்கள் இருவர் பலி; பிட்டவல்கமுவ பிரதேசத்தில் சோகம்
- யாழ். பொலிஸாருக்கு விடுமுறைகள் இரத்து; அரசாங்கம் அதிரடி முடிவு
- பிரபாகரன் புதுப்பிறப்பாக படைக்கப்பட்டவர் – போராட்டம் இன்னொரு உருவம் எடுத்துள்ளது
- தமிழீழ புலிகளின் முன்னாள் போராளி தொடர்பான திரைப்படத்திற்கு சர்வதேச விருது
- ஆசிரியையின் தலையை துண்டித்து 5 கி.மீ. தூக்கிக்கொண்டு ஓடிய நபர் – நண்பகலில் கொடூரம்
- தற்காப்புக்காக என்கவுன்டர் செய்ய வேண்டிய சூழல் உள்ளது – அமைச்சர் ஜெயக்குமார்
- நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் விரைவில் வீடு திரும்புவார்கள் – முதல்வர் உறுதி
- படுக்கைக்கு மறுத்தேன் : வாய்ப்புகளை இழந்தேன் : மல்லிகா ஷெராவத்
- பழனி கோவிலில் தீ விபத்து.. முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்!
- 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 25 வயது இளைஞன் கைது
- மஹிந்த 100 கோடி தருவதாகக் கூறினார்; மீண்டும் சர்ச்சையை கிளப்பிய விஜயகலா
- நன் ஸ்டிக் பாத்திரத்தால் புற்றுநோயா? ஆபத்தின் விளிம்பில் மக்கள்
- மகிந்தவின் தேவைக்காக விஜயகலா புலியை அழைத்திருக்கலாம்; ஐதேக