ஹிஸ்புல்லா, ஞானசாரதேரர் போன்றவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை?

0
960
Hizbullah, Gnanadeer not punish?

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசாரதேரர் போன்றவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை என்றும் அவர்கள் அரசியல் யாப்பை மீறல்லையா என்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். (Hizbullah, gnanasara thera not punish?)

ஹிஸ்புல்லா அமைச்சு பதவியில் இருந்து கொண்டு, தான் ஆயுதத்தை ஏந்தப் போறோம், போராடப்போறோம் என்று நாடாளுமன்றத்திலே வைத்து பேசிய போது, எந்த ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் எந்தவித நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை.

அத்துடன், வடக்கு கிழக்கு இணைந்தால் கிழக்கில் இரத்தே ஆறே ஓடும் என்று அமைச்சு பதவில் இருக்கும் போது கூறியுள்ளார்.

இதேபோன்று பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசாரதேரர், தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் சிறந்த பண்புள்ள தலைமைத்துவத்தினை உடையவர், இப்படியானவர்கள் இப்போது இல்லை, அவசரப்பட்டு ஒரு நல்ல மனிதரை கொன்றுவிட்டோம், அவர் உயிரோடு இருந்திருக்க வேண்டும், பிரபாகரன் போன்றோரின் தேவை அத்தியாவசியமானதொன்று என குறிப்பிட்டார்.

இவர்களுக்கு எதிரான எந்த நடவடிக்கையும் எடுக்காத ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி இராஜாங்க அமைச்சர் விஜயகலா, புலிகள் மீள உருவாக வேண்டும் எனக் பேசியமை மற்றும் ஒரு தமிழர் கூறியமை உங்களுக்கு மீள விடுதலை புலிகளை உருவாக்க முனைகிறார் என்றும் அரசியல் யாப்பை மீறுவது போலவும் உள்ளதா என்றும் அரசியல் விமர்சகர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

தற்போதைய அரசிற்கு தற்கால நல்லாட்சியின் சட்ட நிர்வாக நீதித் துறைகள் ஒழுங்கான வகையில் செயற்பாட்டினை வழங்குமாயின் ஏன் இப்படியான வாதங்கள் பிரதி வாதங்கள், கருத்துக்கள் ஏற்பட போகின்றன.

விடுதலை புலிகள் கட்டுப்பாடான காலத்தில் வடகிழக்கில் குற்றங்கள் நடைபெறுதல் என்பதே குறைவு. அவ்வாறு குற்றங்கள் நடைபெற்றால் உடன் தகுந்த தண்டனைகள் வழங்கப்பட்டு சட்ட நீதி நிர்வாகங்கள் சிப்புற காணப்பட்டதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Hizbullah, Gnanadeer not punish?