வவுனியா, வாரிக்குட்டியூர் கிராமத்தில் தனவந்தர் ஒருவரின் வீட்டில் நுழைந்த மூவர் கைதுப்பாக்கியை காட்டி கொள்ளையடிக்க முயற்சித்ததாக பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் கடந்த புதன்கிழமை முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. Three Person Arrested Vavuniya Divisional Police Involved Robbery
பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோனின் உத்தரவுக்கு அமைவாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி கோரளகெதர மற்றும் சார்ஜன் ஜேசுதாசன் தலைமையில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிசார் நேற்றைய தினம் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன், அவர்கள் கொள்ளையடிக்க பயன்படுத்தியதாக நம்பப்படும் சொகுசு கார் ஒன்றையும், போலி கைத்துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த தனவந்தரின் வீட்டில் கொள்ளையடிக்கச் சென்றவர்கள் சொகுசு காரில் சென்று கைத்துப்பாக்கியை காட்டி கதவை திறக்குமாறு மிரட்டியுள்ளனர். வீட்டு உரிமையாளர் கதவை திறக்காத காரணத்தால் கொள்ளை முயற்சியை கைவிட்டு மூவரும் தப்பித்திருந்தனர்.
வீட்டு உரிமையாளரின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு ராஜகிரிய, வெல்லம்பிட்டிய மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்த 27, 30, 37 வயதுடைய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கியானது போலியானது என்பதுடன் இவர்கள் மூவரும் பல குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை பூவரசங்குளம் பொலிசார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிசார தெரிவித்தனர்.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- வர்த்தகரைக் கட்டிவைத்து கொள்ளையர்கள் கைவரிசை; பத்தரமுல்லையில் சம்பவம்
- ஆன்மிக நம்பிக்கையால் தற்கொலையா? 11 பேர் மர்ம மரண விவகாரத்தில் புதிய திருப்பம்
- நீரவ் மோடிக்கு எதிராக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்தது இன்டர்போல்
- வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! – நடக்குமா? நடக்காதா?
- கெட்ட கொலஸ்ட்ராலை தடுக்கும் மீன் எண்ணெய்!
- இரவில் படுக்கும் முன் செய்யும் இந்த செயல்கள் அழகை பாதிக்கும்!
- இத்தாலி எரிமலை வெடிப்பில் 2000 ஆண்டுக்கு முன் சிக்கியவர் எலும்புக்கூடாக மீட்பு
- 13 தடவை பாலியல் துன்புறுத்தல் : கத்தோலிக்க பிஷப் மீது கன்னியாஸ்திரி புகார்
- ஆம்ஸ்டர்டாம் யூத கல்லறை ஸ்வஸ்திகா சின்னங்களால் சிதைக்கப்பட்டது
- காரைநகரில் மாணவனைக் காணவில்லை; பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
- அவுஸ்திரேலியாவிடம் படுதோல்வியடைந்த நம்பர் ஒன் டி20 அணி
- இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய வகை எரிபொருள்!
- “எய்ம்ஸ்” அமைப்பதில் மோடி அரசு தோல்வி! – இ.டூ ஆய்வில் அம்பலம்!
- இந்தியாவில் 18 லட்சம் பெண்களுக்கு அபாயம்! – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
- மக்கள் கேள்விக்கு ட்விட்டரில் கமலஹாசன் நேரடி பதில்!
- உறவுகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகள் 2 பேரின் கண்ணீர்!
- 80 வயது முதியவரை பிச்சையெடுக்க துரத்திவிட்ட மகன்!
- சொத்துக்களை விற்க அனுமதி கோரி! – விஜய் மல்லையா செக்!
- பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! – தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :