சொகுசு காரில் கொள்ளைக்கு சென்ற மூவர் வசமாக மாட்டினர்!

0
432
Three Person Arrested Vavuniya Divisional Police Involved Robbery

வவுனியா, வாரிக்குட்டியூர் கிராமத்தில் தனவந்தர் ஒருவரின் வீட்டில் நுழைந்த மூவர் கைதுப்பாக்கியை காட்டி கொள்ளையடிக்க முயற்சித்ததாக பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் கடந்த புதன்கிழமை முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. Three Person Arrested Vavuniya Divisional Police Involved Robbery

பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோனின் உத்தரவுக்கு அமைவாக மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரி கோரளகெதர மற்றும் சார்ஜன் ஜேசுதாசன் தலைமையில் விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா பொலிசார் நேற்றைய தினம் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன், அவர்கள் கொள்ளையடிக்க பயன்படுத்தியதாக நம்பப்படும் சொகுசு கார் ஒன்றையும், போலி கைத்துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த தனவந்தரின் வீட்டில் கொள்ளையடிக்கச் சென்றவர்கள் சொகுசு காரில் சென்று கைத்துப்பாக்கியை காட்டி கதவை திறக்குமாறு மிரட்டியுள்ளனர். வீட்டு உரிமையாளர் கதவை திறக்காத காரணத்தால் கொள்ளை முயற்சியை கைவிட்டு மூவரும் தப்பித்திருந்தனர்.

வீட்டு உரிமையாளரின் முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு ராஜகிரிய, வெல்லம்பிட்டிய மற்றும் மன்னார் பிரதேசங்களை சேர்ந்த 27, 30, 37 வயதுடைய மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் கைப்பற்றப்பட்ட கைத்துப்பாக்கியானது போலியானது என்பதுடன் இவர்கள் மூவரும் பல குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை பூவரசங்குளம் பொலிசார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிசார தெரிவித்தனர்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :