மத்தலவில் அனைத்துலக விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் : ரணில்

0
825
Mattala Rajapaksa International Airport

மத்தல விமான நிலையத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் இருந்து மீண்டும் அனைத்துலக விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.(Mattala Rajapaksa International Airport)

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்ட மத்தல அனைத்துலக விமான நிலையத்துக்கு சேவையை நடத்தி வந்த, ஒரே ஒரு விமான சேவையான பிளை டுபாய் நிறுவனமும், அண்மையில் தனது சேவையை நிறுத்தியது.

இதையடுத்து, மத்தல விமான நிலையத்துக்கு தற்போது பயணிகள் விமான சேவைகள் எதுவும் இடம்பெறுவதில்லை.

இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

“முன்னர் மத்தல விமான நிலையத்தில் பறவைகள் மாத்திரம் தரையிறங்கின.

இப்போது, மத்தல விமான நிலையத்தில் இருந்து வணிக விமானங்களை இயக்குவது தொடர்பாக, அரசாங்கம் நம்பிக்கை கொண்டிருக்கிறது.

இந்த ஆண்டு இறுதியில் இருந்து, அனைத்துலக விமானங்கள் மத்தலவில் இருந்து மீண்டும் சேவைகளை ஆரம்பிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

 

Tags:Mattala Rajapaksa International Airport,Mattala Rajapaksa International Airport,Mattala Rajapaksa International Airport,