மடு அன்னையின் ஆடி மாத திருவிழா : பெருமளவு மக்கள் பங்கேற்பு

0
583
mannar madhu Shrine

மன்னார் மடுத்திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று திங்கட்கிழமை (2) கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.(mannar madhu Shrine)

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகை தலைமையில் கொழும்பு துணை ஆயர் மெக்ஸ்வெல்ட் சில்வா ஆண்டகை இணைந்து இன்று காலை 6.15 மணியளவில் திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

திருவிழா திருப்பலியினைத் தொடர்ந்து மடு அன்னையில் திருச்சொரூப பவனியும் அதனைத்தொடர்ந்து மடு அன்னையின் ஆசிர்வாதமும் இடம்பெற்றது.

இதன் போது வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,மன்னார் நீதவான் ரீ.ஜே.பிரபாகரன்,மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, மடு ஆலய பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை மற்றும் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், திணைக்களத்தலைவர்கள் உட்பட நாட்டின் பல பாகங்களில் இருந்தும் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசியை பெற்றனர்.

மடு அன்னையின் ஆடி மாத திருவிழா கடந்த 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக நவ நாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்ட நிலையில் இன்று காலை திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:mannar madhu Shrine,mannar madhu Shrine,mannar madhu Shrine,mannar madhu Shrine,