farmer committed suicide without paying completely dismissed
காட்டுமன்னார்கோவில் அருகே வங்கிக் கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொண்ட விவசாயி கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முத்தரசன் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “விவசாய சாகுபடி பணிக்காக தனியார் வங்கியில் கடன் வாங்கிய காட்டுமன்னார்கோவில் வட்டம், கருனாகரநல்லூர் விவசாயி தமிழரசன் (48) கடன் வசூல் வன்முறையால் தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாகவே விவசாயம் பொய்த்துப் போன நிலையில் கடனை கட்டமுடியாத நிலை ஏற்பட்டிருப்பதை தனியார் வங்கிகள் உணரவில்லை. இது போன்ற தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் உரிமம் பெற்று இயங்குகின்றனவா என்பதை வெளிப்படையாக தெரிவிப்பதில்லை.
அரசின் கடனுதவி கிடைக்காததால் விவசாயிகள் சாகுபடி செலவுக்கு தனியாரையே சார்ந்து இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
லாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு, விவசாயி தமிழரசன் மரணத்திற்கு காரணமான தனியார் வங்கி அலுவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.
விவசாயி தமிழரசன் பெற்ற கடனை முழுமையாக தள்ளபடி செய்ய வேண்டும். குடும்பத்தலைவரை இழந்துவிட்ட தமிழரசன் குடும்பத்திற்கு மறுவாழ்வு நிதிவழங்க வேண்டும். தனியார் வங்கி கடன்வசூலிக்கும் நடவடிக்கைக்கு அரசு வரைமுறை உருவாக்கி அறிவிக்க வேண்டும்” என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
farmer committed suicide without paying completely dismissed
tags;-accident aeroplane black box return
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! – நடக்குமா? நடக்காதா?
- “எய்ம்ஸ்” அமைப்பதில் மோடி அரசு தோல்வி! – இ.டூ ஆய்வில் அம்பலம்!
- இந்தியாவில் 18 லட்சம் பெண்களுக்கு அபாயம்! – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
- மக்கள் கேள்விக்கு ட்விட்டரில் கமலஹாசன் நேரடி பதில்!
- உறவுகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகள் 2 பேரின் கண்ணீர்!
- 80 வயது முதியவரை பிச்சையெடுக்க துரத்திவிட்ட மகன்!
- சொத்துக்களை விற்க அனுமதி கோரி! – விஜய் மல்லையா செக்!
- பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! – தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை!
- கருணைக் கொலை செய்யுங்கள்..! – திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு..!
- திருச்சியில் இளைஞருக்கு சரமாரியாக அடி உதை! (வீடியோ)
- பாக்கெட் பால் குடித்த 2 வயது பெண் குழந்தை மரணம்!
- 8-வழிச் சாலை எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தீக்குளிக்க முயற்சி! (காணொளி)
- இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் ராமநாதபுரம் வந்திறங்கிய மார்ப நபர்!
- முஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்! – வைரலாகும் காணொளி!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :