19 yearold Muslim woman Muzaffarnagar murdered father buried
முஜாபர் நகரில் ஒரு 19 வயது முஸ்லீம் பெண் தனது தந்தையால் கௌரவக் கொலை செய்யப்பட்டு வீட்டிலேயே புதைக்கப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
முசாபர் நகர் கக்ராலி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட சரகத்தைச் சேர்ந்த மசூத் என்பவரின் மகள் சாகிரா இவருக்கு அவர் வீட்டின் எதிரில் வசித்த முனாசிப் (வயது24) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இந்த விவகாரம் பற்றி அவளுடைய குடும்பத்திற்கு தெரிந்தவுடன், அவர்கள் கடுமையாக எதிர்த்தனர் மற்றும் முனாசிப் வீட்டிற்குள் நுழைய தடை விதித்தனர்.
சாகிரா மீது நிறைய தடைகள் இருந்தன, மேலும் அவர் வீட்டை விட்டு வெளியேறினால் அல்லது முனாசிப்பை சந்தித்தால் அவரைக் கொன்றுவிடுவதாக தந்தை அச்சுறுத்தி இருந்தார்.
இருந்தாலும் காதல் ஜோடி இரவில் எல்லோரும் தூங்கியது இருவரும் மொபைல் போனில் பேசிக்கொண்டனர். சாகிராவுக்கு முனாசிப் ஒரு மொபைல் போன் வழங்கி இருந்தார்.
துரதிருஷ்டவசமாக, மசூத் இரவு முனாசிப்புடன் ஒருநாள் பேசும் போது சாகிராவைப் பிடித்துக்கொண்டார்.
போனை பிடிங்கு கொண்டு அவரை ஒரு அறையில் அடைத்து வைத்தார். சாகிராவுக்கு ஒரு நாள் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்து அவரது காதலரை சந்தித்தார். பின்னர் இருவரும் தப்பி ஓடத் திட்டமிட்டபோது, கிராமத்தின் புறநகர்ப்பகுதியில் மசூது அவர்களை மடக்கி பிடித்தார்.
வீட்டிற்கு அழைத்துச் சென்ற மகளை அவர் கொலை செய்தார். பின்னர் வீட்டில் ஒரு கட்டுமான வேலை நடந்து வரும் பகுதியில் சாகிரா உடலை அடக்கம் செய்தார்.
சாகிராவை காணவில்லை என்று உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து போலீசில் புகார் செய்தனர்.
தொடர்ந்து போலீசார் மசூதை கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் உண்மையை ஒத்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து போலீசார் சாகிரா உடலை தோண்டி எடுத்தனர். கௌரவக் கொலையில் தொடர்புடைய மசூத், அவரது மனைவி, மகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
19 yearold Muslim woman Muzaffarnagar murdered father buried
tags;-accident aeroplane black box return
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி! – நடக்குமா? நடக்காதா?
- “எய்ம்ஸ்” அமைப்பதில் மோடி அரசு தோல்வி! – இ.டூ ஆய்வில் அம்பலம்!
- இந்தியாவில் 18 லட்சம் பெண்களுக்கு அபாயம்! – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
- மக்கள் கேள்விக்கு ட்விட்டரில் கமலஹாசன் நேரடி பதில்!
- உறவுகளால் கைவிடப்பட்ட மூதாட்டிகள் 2 பேரின் கண்ணீர்!
- 80 வயது முதியவரை பிச்சையெடுக்க துரத்திவிட்ட மகன்!
- சொத்துக்களை விற்க அனுமதி கோரி! – விஜய் மல்லையா செக்!
- பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! – தொடங்கியுள்ள பசுமை பை விற்பனை!
- கருணைக் கொலை செய்யுங்கள்..! – திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு..!
- திருச்சியில் இளைஞருக்கு சரமாரியாக அடி உதை! (வீடியோ)
- பாக்கெட் பால் குடித்த 2 வயது பெண் குழந்தை மரணம்!
- 8-வழிச் சாலை எதிர்ப்பு தெரிவித்து விவசாயி தீக்குளிக்க முயற்சி! (காணொளி)
- இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் ராமநாதபுரம் வந்திறங்கிய மார்ப நபர்!
- முஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்! – வைரலாகும் காணொளி!
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :