சுண்டுக்குழி பாடசாலை மாணவியின் கொலைக்கு நீதி கோரி, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ். அரசாங்க அதிபரிடம் இன்று மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. (Petition Handover justice Rejina’s murder)
படுகொலைக்கு நீதியான விசாரணைகள் மேற்கோள்ளப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்றும், பொலிஸ் காவலரண் அமைக்கப்பட வேண்டுமென்றும் அந்த மகஜரில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுழிபுரத்தில் பாடசாலை மாணவி றெஜினா துஸ்பிரயோகம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும் நீதியைக் கோரியும் மாணவர்களும் பொது மக்களும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கமைய இன்று கடையடைப்பு போராட்டங்களும் பேரணிகளும் நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு தொடர்ச்சியாக சுழிபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்கள் இன்று காலை அங்கிருந்து பேரணியாகச் சென்று சண்டிலிப்பாய் பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளித்திருந்தனர்.
இதன்பின்னர் அங்கிருந்து பேரூந்துகளில் யாழ். சுண்டுக்குழியில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆளுநர் ரெஜினோல்ட் குரேயிடம் மகஜரொன்றையும் கையளித்துடன், மாவட்ட அரசாங்க அதிபரிடமும் மகஜரொன்றையும் கையளித்துள்ளனர்.
tags :- Petition Handover justice Rejina’s murder
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்தான் – சிங்கள தலைமைகள் சினமடைந்தாலும் அதை வலியுறுத்துவேன்
- மாணவி றெஜினாவின் கொலையில் அரச பிரதிநிதிகள் பாரபட்சம் காட்டுவது ஏன்? பிரதேச மக்கள் விரக்தி
- நடப்பு சாம்பியன் நொக் அவுட் ஆனது ஃபிபாவின் சாபமா – எலைட் பிரிவில் சேர்ந்தது ஜெர்மனி!
- கட்சி பேதங்களை மறந்து உழைத்தால் சிறுமி றெஜினாவின் இழப்பே இறுதி படுகொலையாக இருக்கும் – மாணவர் போராட்டத்தில் டக்ளஸ்
- 24 மனைவிகள் , 149 குழந்தைகள் ,கிறிஸ்தவ பாதிரியாரின் லீலைகள்
- அண்ணனும் தங்கையும் காதல்: பெற்றோர் எதிர்ப்பால் எடுத்த முடிவு
- காதலனுடன் ஊர் சுற்றிய பிரியங்கா கர்ப்பம்! அதிர்ச்சியில் இந்தியுலகம்.
- பாதிரியார்களால் பெண் பாலியல் பலாத்காரம்; பொலிஸாரிடம் அறிக்கை கேட்கும் தேசிய மகளிர் ஆணையம்