வடமாகாண முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் ப.டெனிஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்திற்கு தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. (court bans decision dismiss Balasubramaniam Deniswaran)
வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சராக இருந்த ப.டெனிஸ்வரன் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவரை அமைச்சு பதவியில் இருந்து வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதனையடுத்து, முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, ப. டெனிஸ்வரனை மேன்முறையீடு செய்திருந்தார்.
அரசியல் சாசனத்தின்படி மாகாண அமைச்சர் ஒருவரை பதவி நீக்கும் அதிகாரம் மாகாண ஆளுநருக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தன்னை பதவி நீக்குவதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அவரது மனுவில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், வழக்கை எதிர்வரும் ஜூலை மாதம் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஜகத் டி சில்வா உள்ளிட்ட நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
tags :- court bans decision dismiss Balasubramaniam Deniswaran
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்தான் – சிங்கள தலைமைகள் சினமடைந்தாலும் அதை வலியுறுத்துவேன்
- மாணவி றெஜினாவின் கொலையில் அரச பிரதிநிதிகள் பாரபட்சம் காட்டுவது ஏன்? பிரதேச மக்கள் விரக்தி
- நடப்பு சாம்பியன் நொக் அவுட் ஆனது ஃபிபாவின் சாபமா – எலைட் பிரிவில் சேர்ந்தது ஜெர்மனி!
- கட்சி பேதங்களை மறந்து உழைத்தால் சிறுமி றெஜினாவின் இழப்பே இறுதி படுகொலையாக இருக்கும் – மாணவர் போராட்டத்தில் டக்ளஸ்
- 24 மனைவிகள் , 149 குழந்தைகள் ,கிறிஸ்தவ பாதிரியாரின் லீலைகள்
- அண்ணனும் தங்கையும் காதல்: பெற்றோர் எதிர்ப்பால் எடுத்த முடிவு
- காதலனுடன் ஊர் சுற்றிய பிரியங்கா கர்ப்பம்! அதிர்ச்சியில் இந்தியுலகம்.
- பாதிரியார்களால் பெண் பாலியல் பலாத்காரம்; பொலிஸாரிடம் அறிக்கை கேட்கும் தேசிய மகளிர் ஆணையம்