எந்தக் கணவனும் மனைவிக்கு செய்யக்கூடாத செயல்!

0
522
Andra Husband sells wife

ஆந்திர மாநிலம் கொவளகுண்டாவைச் சேர்ந்தவர் மத்திலெட்டி இவர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவருக்கு 4 பெண் குழந்தைகளும், 1 ஆண் குழந்தைகளும் உள்ளது. Andra Husband sells wife

மத்திலெட்டி மதுபோதைக்கு அடிமையாகி பல இடங்களில் கடன் வாங்கி உள்ளார். கடன் பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு பிறந்த குழந்தையை ரூ 1.5 லட்சத்திற்கு விற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் 15 லட்சம் ரூபாய் கடனுக்காக தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை 5 லட்ச ரூபாய்க்கு தனது அண்ணனிடம் விற்று ஒப்பந்தம் செய்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தில் மனைவி வெங்கடம்மாவை கையெழுத்திட தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் வெறுத்து போன வெங்கடம்மா, குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

பின்னர் தனது கணவர் குறித்து பெண்கள் நல அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மத்திலெட்டியை தேடி வருகின்றனர்.

தாலி கட்டிய மனைவியை அண்ணனுக்கு கணவன் விற்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

tags :-  Andra Husband sells wife
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
பாவ மன்னிப்பு கேட்ட பெண்ணை மிரட்டி கற்பழித்த 5 பாதிரியார்கள் ….
மைக்கேல் ஜாக்சனின் தந்தை அமெரிக்காவில் மரணம்
டைகருடனான டேட்டிங் குறித்து எப்பொழுதும் ரகசியம் காப்பேன் : திஷா பதானி
தெலுங்கு மருமகளாகும் விஜய் நட்சத்திரம் : வைரலாகும் புகைப்படம்
இங்கிலாந்து போட்டியில் கலக்கிய கவர்ச்சிக் குண்டுகள்!
24 மனைவிகள் , 149 குழந்தைகள் ,கிறிஸ்தவ பாதிரியாரின் லீலைகள்
மஹத் மீது கண் வைக்கும் யாஷிகா :அப்போ ஒரு வேலை லவ் பத்திகுமோ??

எமது ஏனைய தளங்கள்