சிறுமியை கொலை செய்த பின்னர், அவளது பாடசாலை சீருடையை நெருப்பில் எரித்ததாகவும், தோடுகளைத் திருடுவதற்காகவே அவளைக் கொலை செய்ததாகவும் யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் சிறுமி ரெஜினா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் அதிர்ச்சி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.(solipuram jaffna 6 old girl regina murder suspect statement)
கைது செய்யப்பட்ட 4 சந்தேகநபர்களில் ஒருவர் மனநோயாளியைப் போல நடிப்பதாகவும், ஆனால் சிறுமியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சிறுமியை தான் மட்டுமே கொலை செய்ததாகவும் மனநோயாளியைப் போல நடிக்கும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.
யாழ். சுழிபுரம் பகுதியில் 6 வயது சிறுமி றெஜினா நேற்று மாலை கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்தில் சிறுமியின் சிறிய தந்தை உள்ளிட்ட நால்வரை நேற்று பொலிஸார் கைது செய்திருந்த நிலையில், இன்று காலை மேலும் இருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
மேலும் குறித்த 6 சந்தேகநபர்களிடமும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சிறுமி ரெஜினாவுக்காக பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளதுடன், போராட்டங்களும் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
tags :- solipuram jaffna 6 old girl regina murder suspect statement
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- முஸ்லிம்களின் நன்மை கருதியே சிறையில் காற்சட்டை அணிய இணங்கினேன்
- காத்தான்குடியில் கோர விபத்து – வேனில் பயணித்த மூவர் மரணம்
- இறுதி கட்டத்தில் திரில் கோல் போட்டு எகிப்தை வீழ்த்திய சவுதி அரேபியா!
- ரஷ்யாவை அதன் சொந்த மைதானத்தில் பந்தாடியது உருகுவே!!!
- தென்னிந்தியாவை ஆட்டிப் படைக்கும் பிக்பாஸ் காய்ச்சல்!
- மஹிந்தவின் ஊடக இணைப்புச் செயலாளர் சிங்கப்பூரில் கைது
- தவறான நட்பால் கொல்லப்பட்ட ராணுவ அதிகாரியின் மனைவி (UPDATE)
- நான் திருடன்தான் என்றால், என்னையும் சிறையில் அடையுங்கள் – நாமல் ராஜபக்ஷ விரக்தி