சந்தேகத்தால் பறிபோன உயிர்கள்: பதறவைக்கும் சம்பவம்

0
502
Hanwella Twin Murder

பிறந்த குழந்தை அண்ணாவினுடையது என்ற சந்தேகத்திலேயே மனைவியையும், மாமியையும் கொலை செய்துள்ளதாக ஹங்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டை கொலையின் சந்தேகநபர் தெரிவித்துள்ளார். Hanwella Twin Murder

மேரி ராணி என்ற 68 வயதுப் பெண், 38 வயதான லியனகே லக்மினி, 2 வயது குழந்தை மற்றும் 26 வயதுடைய லக்மினியின் கணவர் ஆகியோர் இலக்கம் 196 வெலிவில்லேவ ஹங்வெல்ல என்ற முகவரியில் வசித்து வந்துள்ளனர்.

அவ்வப்போது குடும்பத்தில் தகராறுகள் இடம்பெற்றுள்ளன.

அயலவர் ஒருவர் சாட்சியமளிக்கையில்…..

ராணி அக்காவின் வீட்டில் குழந்தை அழுதுக்கொண்டே இருக்கு, போய் பார் என எனது அம்மா கூறினார்.

நான் சென்று பார்த்தேன் கதவு பூட்டப்பட்டிருந்தது, தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினேன், கையடக்க தொலைபேசியும் இயங்கவில்லை. பின்னர் ஜன்னல் வழியாக சென்று பார்த்தேன் ராணி அக்காவும், லக்மினி அக்காவும் இரத்தம் வழிந்தபடி கீழே கிடந்தனர்.

பார்த்தவுடன் அச்சத்தில் காவல் துறையினருக்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிவித்தேன். சிறிது நேரத்தில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.பின்புறம் உள்ள கதவினை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று அழுதுக்கொண்டிருந்த குழந்தையை மீட்டு அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதித்தனர். இதன்போது படுகாயங்களுடன் கீழே விழுந்திருந்த தாய் மற்றும் மகள் கத்தியால் வெட்டப்பட்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர்.

குறித்த இருவரின் சடலங்களும் அவிசாவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதன் பின்னர் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்தனர். இதன்போதே காவல் துறையினருக்கு பல புதிய விடயங்கள் கிடைத்துள்ளன. லக்மினி என்பவர் திருமணம் முடிக்கவிருந்த நபரை திருமணம் முடிக்காமல் அவரின் தம்பியை திருமணம் முடித்துள்ளதாகவும், திருமணம் முடிந்து சிறிது காலத்தின் பின்னர் அண்ணாவை மனைவி திருமணம் முடிக்கவிருந்ததை அறிந்துக்கொண்டுள்ளார் லக்மினியின் கணவர். அவர்களுக்கு குழந்தை ஒன்றும் பிறந்திருந்த நிலையில், குறித்த குழந்தை அண்ணாவிற்கு பிறந்தது என சந்தேகித்து தினமும் வீட்டில் கணவர் சண்டையிட்டு வந்துள்ளார். இதனாலேயே மனைவியையும் மனைவின் தாயாரையும் கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். தாயையும் மனைவியையும் கொலை செய்த குறித்த நபர் தற்பொழுது தலைமறைவாகியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- Hanwella Twin Murder

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites