உண்மையை அறியாமல் உயிரச்சுறுத்தல் விடுக்கின்றனர் – உளவியல் ரீதியில் சித்திரவதை என்கிறார் சந்தியா எக்னலிகொட

0
657
Sandhya Eknaligoda wife journalist Prageeth Eknaligoda calling threats

(Sandhya Eknaligoda wife journalist Prageeth Eknaligoda calling threatsc)

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவுக்கு புதிதாக அச்சுறுத்தல்களை விடுக்கும் வகையிலான அழைப்புகள் வருவதாக தெரிவித்துள்ளார்.

கலகொட அத்தே ஞானசார தேரரின் விவகாரம் தொடர்பிலேயே தனக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர் சமூக ஊடகங்கள் மூலமாகவும் அதிக அச்சறுத்தல்கள் விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் ஊடாக நாளாந்தம் தனக்கு அச்சுறுத்தல்களும், கொலைமிரட்டல்களும் விடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

உண்மையை அறியாமல் விபரங்களை முழுமையாக தெரிந்து கொள்ளாமல் மக்கள் என்னையும் எனது பிள்ளைகளையும் உளவியல் ரீதியில் சித்திரவதை செய்வதாகவும் சந்தியா தெரிவித்துள்ளார்.

பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் விவகாரத்திற்கு பின்னர் அடையாளம் தெரியாத முகப்புத்தக பயனாளர்கள் மரண அச்சுறுத்தலை விடுத்துகின்றனர்.

அவர்களில் பலர் எனது கணவர் விடுதலைப் புலிகளின் உளவாளி என்ற குற்றச்சாட்டை முன்வைத்து மிரட்டல் விடுக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில ஆண்கள் உண்மையை அறியாமல் ஆதரவற்ற பெண் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர்.

மகிந்த ராஜபக்சவும், கோட்டாபய ராஜபக்சவும் அரசாங்கத்தை நிர்வகித்த போது இவற்றை மக்கள் மனதில் புகுத்தியுள்ளனர் அவை இன்றும் நீடிக்கின்றன என்றும் அவர் குற்றம்சுமத்தியுள்ளனர்.

(Sandhya Eknaligoda wife journalist Prageeth Eknaligoda calling threats)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites