​ஏ.டி.எம் மையங்களில் லட்சக்கணக்கில் மோசடி!

0
334
lakhs fraud ATM centers coimbatore

சில தினங்களுக்கு முன்பு, கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் செயல்பட்டுவந்த தனியார் வங்கி ஏ.டி.எம்மில் பணம் எடுத்த 12 பேரின் வங்கிக்கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.lakhs fraud ATM centers coimbatore

இது தொடர்பான புகாரின் பேரில், சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது.

ஏ.டி.எம் மையங்களில் உள்ள வங்கி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டதில், குற்றவாளிகள் பெங்களூரு  கிருஷ்ணகிரி  உள்ளிட்ட பகுதிகளில் கைவரிசை காட்டி வந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து தனிப்படை போலீசார், கிருஷ்ணகிரி சோதனைச் சாவடி அருகே 6 பேரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 ஏ.டி.எம் கார்டுகள், 17 செல்போன்கள், பி.எம்.டபிள்யூ கார் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

பல்வேறு ஏடிஎம்களில் சுமார் 19 லட்சம் ரூபாய் அளவிற்கு அவர்கள் கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது. 6 பேர் மீதும் புதுச்சேரி, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :