manager pune booked farmers obtain loan indiatamilnews
விவசாய லோன் வழங்க விவசாயின் மனைவியிடம் பாலியல் ஆதாயம் கேட்ட வங்கி மேலாளர் மற்றும் பியூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை புல்டானா மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை மேலாளர் விவசாயி ஒருவரின் மனைவியுடன் தனக்கு நெருக்கமாக நடந்து கொண்டால் லோன் கொடுப்பதாக கூறியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மலாக்காபூர் தெஹ்ஸில் உள்ள தாளாலாவில் உள்ள பெண் தனது கணவருடன் சேர்ந்து பயிர் கடன் பெற விண்ணப்பித்துள்ளார்.
கிளை மேலாளர் ராஜேஷ் ஹேவாஸ் பெண்மணியின் தொடர்பு விபரங்களைப் பெற்றுக் கொண்டார். அதன்பிறகு, அந்த பெண்ணை அழைத்து, ஆபாசமாகப் பேசி உள்ளார். பின்னர் பாலியல் ஆதாயம் கேட்டு உள்ளார்.
பின்னர், ஹேவாஸ் பெண்ணின் வீட்டிற்கு ஒரு பியூனை அனுப்பினார். அந்த பியூன் மேலாளர் சொல்கிற படி நடந்து கொண்டால் நன்மை அடையாலாம் என கூறி உள்ளார்.
இந்த நிலையில் மேலாளர் மொபைலில் பேசிய விவரங்களை பதிவு செய்த அந்த பெண் இது குறித்து போலீசில் புகார் அளித்து உள்ளார். மேலாளர் மற்றும் பியூன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இருவரும் தலைமறைவாகி உள்ளனர்.
manager pune booked farmers obtain loan indiatamilnews
More Tamil News
போதும் என்னை விட்டுவிடுங்கள்! – நடிகை கஸ்தூரி வீடியோ!
கந்தக அமிலத்தை அகற்றினால் மீண்டும் திறக்கப்படுமா? – ஸ்டெர்லைட் ஆலை!
பா.ஜ.க அரசால் விவசாயி குடும்பத்துடன் தற்கொலை – காரணம் என்ன?
கர்ப்பிணி பெண்ணை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து ஓட்டுனர்!
15 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால் பரிசு – மிசோரமில் அறிவிப்பு!
Tamil News Group websites :