(US withdrawal United Nations Human Rights Commission sumandiran)
அமெரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் சபை உறுப்புரிமையிலிருந்து வெளியேறினாலும், வெளியிலிருந்து கையாளக்கூடிய வகையில் அவர்களின் உதவிகளை பெற்றுக் கொள்ளவும் பேச்சு நடத்துவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, அமெரிக்காவின் வெளியேற்றம் எமக்குப் பாதிப்பானது.
அவர்கள் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உறுப்பினர்களாக இல்லாவிடினும், அவர்கள் ஊடாக விடயங்களை எப்படிச் செய்விப்பது என்பது தொடர்பில் அமெரிக்காவுடன் நாங்கள் பேச்சு நடத்துவோம்.
வெளியில் இருந்து எப்படி விடயங்களைக் கையாளலாம் என்று ஆராய்வோம்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா தலைமை வகித்து தீர்மானங்களைக் கொண்டு வரும்போது, அதற்கு இரண்டாம் நிலையிலிருந்து தலைமைத்துவம் வழங்கிய பிரிட்டன் மொன்டாரியோ, மசிடேனானியா ஆகிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இருக்கின்றன. அந்த நாடுகளுடன் பேச்சு நடத்துவோம்.
இலங்கை விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா தலைமை தாங்கி நிறைவேற்றிய தீர்மானத்துக்கு எந்தப் பாதிப்பும் வராது.
அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவேண்டியது, அதனைக் கண்காணிக்கவேண்டியது எல்லாம் ஐ.நா. மனித உரிமைகள் சபையும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருமே.
ஆனால் அழுத்தம் கொடுப்பது, எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பிலேயே அமெரிக்காவின் தேவை இருக்கின்றது. அமெரிக்கா வெளியேறினாலும், உறுதியாக தலைமைத்துவம் வழங்கக் கூடிய ஏனைய தரப்புக்களுடன் நாங்கள் பேச்சு நடத்தவுள்ளோம்.
பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தப் பேச்சுக்கள் இடம்பெறும். மாற்று வழிகளாக இதனை ஆராய்கின்றோம் – என்றார்.
(US withdrawal United Nations Human Rights Commission sumandiran)
- பாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை!
- வீடியோ: லைகா மொபைல், போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு துணை போகும் நிறுவனமா?
- ஞானசார தேரருக்கு அரைக் காற்சட்டையே வழங்கப்படும்; தனியான சலுகை வழங்கப்பட மாட்டாது
- மக்காவின் புனித தன்மைக்கு களங்கம் விளைவித்த நபர்!
- துரத்தி துரத்தி சுட்டுக் கொன்றோம்; உளறிய கருணா அம்மான்
- இணையத்தளத்தில் வெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்
- தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி; வவுனியாவில் சம்பவம்
- வவுனியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றம் சுமத்தப்பட்டவர் போலி வைத்தியரே
-
Tamil News Group websites