மாத்தறையில் பதற்றம் : 3 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 4 பேர் படுகாயம்

0
595
matara gun shooting

மாத்தறை நகரில் சற்றுமுன்னர் பொலிஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையில் நடைபெற்ற பரஸ்பர துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 3 பொலிஸ் அதிகாரிகள் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் குறித்தப் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.(matara gun shooting)

மாத்தறை நகரில் உள்ள தங்க ஆபரண கடை ஒன்றில் கொள்ளையடிக்க வந்த குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடையிலேயே இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 3 பொலிஸ் அதிகாரிகளும், ஒரு பொதுமகனும் படுகாயமடைந்துள்ளதோடு அவர்கள் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொள்ளையர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

tags :- matara gun shooting

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites