(Chinese company port lease 52 million landfill Sri Lankan navy)
ஹம்பாந்தோட்டை துறைமுக சூழலில் இலங்கை கடற்படையினருக்கு இடவசதிகளை வழங்குவதற்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள இறங்குதுறையை பயன்படுத்த, துறைமுகத்தை குத்தகைக்கு எடுத்துள்ள சீன நிறுவனம் 52 மில்லியன் ரூபாவை குத்தகை தொகையாக வழங்குமாறு கோரியுள்ளது.
இது தொடர்பாக, இலங்கை கடற்படையினருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியதால், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படாது என நல்லாட்சி அரசாங்கம் கூறியிருந்தது.
ஆனாலும் இறங்குதுறையை பயன்படுத்த 52 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு அறிவித்துள்ளதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பங்கம் ஏற்பட்டுள்ளமை உறுதியாகி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கை கடற்படையினரை பயன்படுத்தி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்கு பதிலாக சீன நிறுவனம் கடற்படையினரிடம் குத்தகை பணத்தை கேட்டுள்ளமை தொடர்பாக நல்லாட்சி அரசாங்கம் முழு நாட்டு மக்களிடமும் மன்னிப்பு கோர வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
(Chinese company port lease 52 million landfill Sri Lankan navy)
- பாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை!
- வீடியோ: லைகா மொபைல், போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு துணை போகும் நிறுவனமா?
- ஞானசார தேரருக்கு அரைக் காற்சட்டையே வழங்கப்படும்; தனியான சலுகை வழங்கப்பட மாட்டாது
- மக்காவின் புனித தன்மைக்கு களங்கம் விளைவித்த நபர்!
- துரத்தி துரத்தி சுட்டுக் கொன்றோம்; உளறிய கருணா அம்மான்
- இணையத்தளத்தில் வெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்
- தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி; வவுனியாவில் சம்பவம்
- வவுனியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றம் சுமத்தப்பட்டவர் போலி வைத்தியரே
-
Tamil News Group websites