ஊடக நிறுவனத்தில் தீவிரவாதிகள் ஊடுருவல்! – பொன்.ராதாகிருஷ்ணன்!

0
550
terrorists intrusion media agency - ponn radhakrishnan!

தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார். இவ்விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்கள் பெரும் அழிவைச் சந்திப்பார்கள் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.terrorists intrusion media agency – ponn radhakrishnan!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “ நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள், முஸ்லிம் பயங்கரவாதிகள், தமிழ்ப் பெயரை சொல்லி பிரிவினைவாதத்தை பேசிக்கொண்டிருக்கும் பல்வேறு பயங்கரவாத இயக்கங்கள் தமிழகத்தின் பல அமைப்புகளுக்குள் ஊடுருவி இருக்கிறார்கள். எனவே தமிழக அரசு விரைந்து செயல்படவில்லை என்றால் தமிழக மக்கள் மிகப் பெரிய அழிவை சந்திக்க கூடிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுவார்கள்” என தெரிவித்தார்.

ஏற்கனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது சமூக விரோதிகள் புகுந்ததுதான் வன்முறை ஏற்படக் காரணம் என ரஜினிகாந்த் குற்றஞ்சாட்டியிருந்தார். அதேபோல் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாளிலும் சமூக விரோதிகள் உட்புகுந்ததாக ரஜினி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தின் பல அமைப்புகளுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மத்திய அமைச்சர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :