யாழ். பெண் கொழும்பில் திட்டமிட்டு படுகொலை; பொலிஸார் அதிர்ச்சித் தகவல்

0
531
Planned assassination Jaffna woman Colombo

கொழும்பு கொட்டாஞ்சேனையில் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் தொடர்பில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. (Planned assassination Jaffna woman Colombo)

யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய குறித்த பெண், கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் உள்ள வீடொன்றில் பணிப் பெண்ணாகப் பணியாற்றி வந்த நிலையில், கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த நபர்களே இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாக சந்தேகம் வெளியிடும் பொலிஸார், கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

படுகொலை செய்யப்பட்ட பெண் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் இந்த பெண் வேலை செய்யும் வீட்டில் வைத்தே கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் கழுத்தில் கத்தியால் குத்தியே கொலை செய்யப்பட்டதாகவும் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்தவர்களே இந்த கொலையை செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து கொழும்பு – கொட்டாஞ்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், யாழ். கோப்பாய் பொலிஸாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பெண்ணை கொலை செய்த கத்தி குறித்த வீட்டில் இருந்ததா? அல்லது கொலை செய்யப்பட்டவர்களால் கொண்டு வரப்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

tags :- Planned assassination Jaffna woman Colombo

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை