சிறைச்சாலையில் உள்ள பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. (hunger strike demanding release Gnanasara Thera)
மகா சங்கத்தினர் கொழும்பு புறக்கோட்டை விகாரைக்கு முன்னால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் கை வைத்துள்ளது ஞானசார தேரர் மீதல்ல, முழு மகா சங்கத்தினர் மீது என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு அதிகளவிலான தேரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன், பல்வேறு கோரிக்கை அடங்கிய பதாதைகளை தாங்கியும் இருந்தனர்.
காணாமல் போன ஊடகவியலாளர் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை திட்டி, அச்சுறுத்திய வழக்கில், பொது பலசேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொட அத்தே ஞானசார, குற்றவாளி என ஹோமாகம நீதிமன்றம் அறிவித்துள்ளது.
குற்றவாளியாக இனங்காணப்பட்டு, ஞானசார தேரர் தற்பொழுது சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்ற நிலையில், அவரை விடுவிக்க கோரி இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
tags :- hunger strike demanding release Gnanasara Thera
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை!
- வீடியோ: லைகா மொபைல், போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு துணை போகும் நிறுவனமா?
- ஞானசார தேரருக்கு அரைக் காற்சட்டையே வழங்கப்படும்; தனியான சலுகை வழங்கப்பட மாட்டாது
- மக்காவின் புனித தன்மைக்கு களங்கம் விளைவித்த நபர்!
- துரத்தி துரத்தி சுட்டுக் கொன்றோம்; உளறிய கருணா அம்மான்
- இணையத்தளத்தில் வெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்
- தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி; வவுனியாவில் சம்பவம்
- வவுனியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றம் சுமத்தப்பட்டவர் போலி வைத்தியரே
-
Tamil News Group websites