பாடசாலை மாணவியான 14 வயதுடைய தனது ஒரேயொரு மகளை ஐந்து மாதக் கர்ப்பிணியாக்கிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். (Father sexually abused daughter)
தனது மகளை அச்சுறுத்தி, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, பின்னர் வெகு நாட்களாக இரகசியமாக கணவன், மனைவி போன்று வாழ்ந்தும் வந்துள்ளார்.
இந்த கொடூரமான தந்தையை கைதுசெய்த பொலிஸார், குருநாகல் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் ஜுலை மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குருநாகல், மாஸ்பொதை, குடாகல்கமுவ பிரதேசவாசியான சந்தேக நபரை குருநாகல் பொலிஸ் தலைமையகத்தின் குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்தனர்.
இந்தச் சம்பவத்தை தாயிடம் கூறினால் கொன்றுவிடுவேன் என பயமுறுத்தி தனது மகளுடன் சந்தேக நபர் பாலியல் உறவு கொண்டுள்ளார்.
இதற்கிடையில் குறித்த சிறுமியின் தாயாரும் வெளிநாடு சென்ற நிலையில், வீட்டில் இருந்த பாட்டி, சிறுமியின் வயிறு பெரிதாக இருப்பதையும், அவளின் நடமாட்டத்தின் மீதும் சந்தேகம் கொண்டுள்ளார்.
இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் குருநாகல் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். தற்பொழுது குறித்த சிறுமி அவரின் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
tags :- Father sexually abused daughter
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை!
- வீடியோ: லைகா மொபைல், போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு துணை போகும் நிறுவனமா?
- ஞானசார தேரருக்கு அரைக் காற்சட்டையே வழங்கப்படும்; தனியான சலுகை வழங்கப்பட மாட்டாது
- மக்காவின் புனித தன்மைக்கு களங்கம் விளைவித்த நபர்!
- துரத்தி துரத்தி சுட்டுக் கொன்றோம்; உளறிய கருணா அம்மான்
- இணையத்தளத்தில் வெளியானது காணாமல்போனோர் பெயர் பட்டியல்
- தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி; வவுனியாவில் சம்பவம்
- வவுனியாவில் பாலியல் துஷ்பிரயோக குற்றம் சுமத்தப்பட்டவர் போலி வைத்தியரே
-
Tamil News Group websites