கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் ஜமைக்காக டளவாஸ் அணியின் தலைவராக மே.தீவுகளின் அதிரடி சகலதுறை வீரர் என்ரே ரஷல் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊக்கமருந்து குற்றச்சாட்டுக்கு முகங்கொடுத்திருந்த ரஷல் கடந்த வருடம் நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்திருந்தார்.
இவரது தடைக்காலம் நிறைவுக்குவந்த நிலையில், இந்தியாவில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் விளையாடினார். கொல்கத்தா அணிக்காக விளையாடிய இவர் 14 போட்டிகளில் 314 ஓட்டங்களை விளாசியுள்ளதுடன், 13 விக்கட்டுகளையும் கைப்பற்றினார்.
இந்நிலையி்ல் தற்போது மீண்டும் ஜமைக்கா அணிக்குள் இணைக்கப்பட்டுள்ள ரஷலுக்கு, அணித்தலைமை பதவியும் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் குறிப்பிட்ட ரஷல்,
“எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. கடந்த வருடம் தடை காரணமாக விளையாடவில்லை. இந்த ஆண்டு போட்டியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன். போட்டியை மாத்திரமின்றி அணித்தலைவராக சிறப்பாக செயற்படவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்.
ஜமைக்கா டளவாஸ் அணி இரண்டு தடவைகள் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதுடன், கடந்த வருடம் எலிமினேட்டர் வரை முன்னேறியிருந்தது. கடந்த வருடம் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார இந்த அணியின் தலைவராக செயற்பட்டிருந்தார்.
இவ்வருடம் டளவாஸ் அணியில் ரோஸ் டெய்லர், டேவிட் மில்லர், சொயிப் மலிக் மற்றும் சஹிட் அப்ரிடி ஆகியோரும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
<<மேலும் பல விளையாட்டுச் செய்திகளுக்கு>>
- ஏன் இப்படி செய்தார்? : பாகிஸ்தான் வீரர் செய்த மோசமான செயல்!!!
- உச்சகட்ட சோதனைக்கு ஆளாக்கப்பட்ட அவுஸ்திரேலியா!!! : ஏன் தெரியுமா?
- சதத்தை தவறவிட்ட குசால் மெண்டிஸ்! : பலமான நிலையில் இலங்கை!!!
- சந்திமால் உண்மையில் பந்தை சேதப்படுத்தினாரா? : வெளியாகிய முக்கிய தகவல்!!!
- இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார் ராயுடு!!!
- மோசமான சாதனையை சொந்தமாக்கிய பிரபல அணிகள்!!!
- பந்தை சேதப்படுத்தி சிக்கிக்கொண்ட சந்திமால்… : ஐசிசியின் அதிரடி நடவடிக்கை!!!
- உலகக்கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இரண்டு அணிகள் : எந்தெந்த அணிகள்?
<<எமது மேலதிக செய்தி இணையத்தளங்கள்>>
Andre Russell CPL 2018 latest news Tamil, Andre Russell CPL 2018 latest news Tamil, Andre Russell CPL 2018 latest news Tamil