பரிஸில் வசிக்கும் ஓய்வூதியம் பெறும் முதியவர்களிடம் நூதன முறையில் கொள்ளையிட்ட ஒருவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 72 year old person’s innovative robbery
பரிஸ் 11 ஆம், 12 ஆம், 13 மற்றும் 15 ஆம் வட்டாரங்களில் குறித்த 72 வயதுடைய முதியவர் தனது கைவரிசையை காட்டியுள்ளார். குறித்த முதியவர் காவல்துறையினர் போன்று போலியான அடையாள அட்டையுடன் உள் நுழைந்து அவர்களிடம் பணம் பெற்றுள்ளார்.
இதுவரை 74 தொடக்கம் 90 வயதுகளுடைய பல முதியவர்களே, இவரின் நூதன திருட்டில் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்துள்ளனர்.
குறித்த நபர் கொள்ளையர்களிடம் பணத்தை இழக்க வேண்டாம் எனவும், தான் உங்களுக்காக உதவுவதற்காகவே செயற்படுவதாகவும் நம்ப வைத்து பலரிடம் பணத்தை திருடியுள்ளார்.
இதுதவிர 4,000 யூரோக்கள் மதிப்புள்ள நகைகளையும் திருடியுள்ளார். குறித்த நபருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
tags :- 72 year old person’s innovative robbery
**Most Related Tamil News**
- அல்லாவை கூப்பிட்டுக்கொண்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த காரியம்!
- பாரிஸில் வாழ்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- இளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா? கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க!