தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சி; வவுனியாவில் சம்பவம்

0
646
Mother, three children trying commit suicide

வவுனியா செட்டிகுளம் பகுதியில் தாயும் மூன்று பிள்ளைகளும் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.(Mother, three children trying commit suicide)

இன்று காலை இடம்பெற்ற இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, செட்டிகுளம், மெனிக்பாம் 3 பகுதியிலுள்ள வீடொன்றில் கணவன் காலையில் வேலைக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில் மனைவி தனது மூன்று பிள்ளைகளுக்கும் நஞ்சு மருந்தினை சோடாவுடன் கலந்து வழங்கியதுடன், தானும் அதனை அருந்தியுள்ளார்.

இதன்போது இரண்டாவது மகனான 6 வயது சிறுவன் தனது பாட்டியை தொலைபேசியில் தொடர்புகொண்டு அம்மா சோடாவுடன் ஏதோ கலந்து தந்துவிட்டாதாகக் கூறியுள்ளார்.

இதனையடுத்து அங்கு சென்ற உறவினர்கள், உயிருக்குப் போராடிய நிலையில் இருந்த நால்வரையும் மீட்டு செட்டிகுளம் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

40 வயதான தாய் மற்றும் 12 வயது, 6 வயது, 1 1/2 வயது பிள்ளைகள் மூவரும் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

tags :- Mother, three children trying commit suicide

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites