நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும், சாட்சியை அச்சுறுத்தும் வகையிலும், நடந்து கொண்ட குற்றச்சாட்டில் சிறைத் தண்டனையை அனுபவிக்கும் ஞானசார தேரரை விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கொழும்பில் இன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பொது பலசேனா அறிவித்துள்ளது.(pothu bala sena start protest today realise gnanasara thero)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்ய வேண்டும் என்று பௌத்த பிக்குகள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளிப்பது குறித்து ஜனாதிபதி ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, ஞானசார தேரருக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக சீனிகம தேவாலயத்தில் நேற்றுமுன்தினம் சிகல ராவய அமைப்பினர் தேங்காங்களை உடைத்து வழிபாடுகளை நடத்தினர்.
இன்று அவரது விடுதலையை வலியுறுத்தி கொழும்பில் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஞானசார தேரர் விடுவிக்கப்படாவிடின், பௌத்தர்களை வீதியில் இறக்கி போராடுவோம் என்று பொது பலசேனா அமைப்பினர் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஞானசார தேரர், விருந்தினர்களை சந்திக்க தொடர்ந்து மறுத்து வருகிறார். நேற்றும் கூட அவர் யாரையும் சந்திக்கவில்லை.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் உள்ள ஆர் விடுதியில், 14 கைதிகளுடன் அடைக்கப்பட்டுள்ளார் ஞானசார தேரர்.
சனிக்கிழமை இரவு அவர் ஏனைய கைதிகளுக்கு தர்ம உபதேசம் செய்துள்ளார்.
அவருக்கு கடினமான வேலைகள் அளிக்கப்படுவதில் இருந்தும், சிறைச்சாலை உடை அணிவதில் இருந்தும் விலக்களிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், ஞானசார தேரருக்கு சிறைச்சாலை உடை வழங்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் ஆணையாளர் துசார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
tags :- pothu bala sena start protest today realise gnanasara thero
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விடுதலைப் புலியின் உளவு பிரிவு தளபதி பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா?
- வடக்கில் தேனாறும் பாலாறும் ஓடுவதற்கு டக்ளஸ் முதலமைச்சர் ஆகவேண்டும்
- சமகால அரசியல் நடவடிக்கைகளுக்கு ஏற்ப மறுசீரமைக்கப்படும் – சம்பந்தன்
- பணம் பெற்ற 118 பேர் தொடர்பில் ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும்
- தொடர்ச்சியாக நிகழும் முன்னாள் போராளிகளின் மர்மமான மரணம்!!
- சாந்தியின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் – மனதை உருகவைக்கும் காட்சி
- இராணுவத்தினரை கொண்டு யாசகர்களை அகற்ற நடவடிக்கை
- ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்க விலகல்
- க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் மகிழ்ச்சியான செய்தி!!
- ATM இயந்திரத்தில் பணம் மோசடி செய்த இளைஞர்கள் கைது!!
- தமிழை சரளமாக பேசும் மைத்திரி குணரட்ணவால் மாத்திரமே தமிழருக்கு தீர்வு – ஐ.தே.சு.மு இணை தலைவர்
- கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையம் சீனாவிடம் கையளிப்பு – 50 பில்லியன் நட்டம்
- யாழில் வாள்வெட்டுச் சம்பவம் – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி (காணொளி)
- சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க ஆதரவில்லை – மஹிந்த
- பாடசாலை பெண் ஊழியர்கள் குட்டைப் பாவாடை அணிய வேண்டுமாம் – அதிபர்கள் வலியுறுத்தல்
- வௌ்ளை சட்டை, வௌ்ளை ட்ராயருடன் சிறைச்சாலை கைதி ஞானசார – சிறப்பு புகைப்படம்
- நாட்டு மக்களின் உணர்வுகளை நல்லாட்சி அரசு மழுங்கடிக்கிறது
- கிரிவெஹெர பிக்குவை கொலை செய்ய 3 மில்லியன் ஒப்பந்தம் – சதித்திட்டம் அம்பலம்
- 21 வது அரசமைப்பு திருத்த சட்டம் விரைவில் வரும் – மனோ கணேசன்
- 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் தயாராகுங்கள் – ஶ்ரீ லங்கன் விமான சேவையிடமிருந்து கோரிக்கை
- ஞானசாரவை வேண்டுமென்றே அரசாங்கம் சிறையிலடைத்துள்ளது – மகிந்த ராஜபக்ஷ வருத்தம்