21 வது அரசமைப்பு திருத்த சட்டம் விரைவில் வரும் – மனோ கணேசன்

0
933
Minister Mano Ganesan 21st Constitution amendment introduced

(Minister Mano Ganesan 21st Constitution amendment introduced)

21 வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தைக் கொண்டு வரப்போவதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நேற்று (17) வெள்ளவத்தை தமிழ் சங்க மண்டபத்தில் தர்மலிங்கம் மனோகரன் எழுதிய உள்ளதைச் சொல்கின்றேன் நல்லதைச் சொல்கின்றேன் எனும் நூல் வெளியீட்டு விழாவில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், தமிழ் மக்கள் 20 வது அரசியல் சீர்திருத்தம் வரும் வரும் என்று நம்பி ஏமாந்து விட்டனர்.

இனியும் ஏமாற முடியாது. இதன் காரணமாக நான் 21 வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தைக் கொண்டு வரப்போவதாக தெரிவித்தார்.

அத்துடன், 1956 ஆம் ஆண்டின் சிங்கள மொழிக் கொள்கையே நாட்டில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது என்றும் இந்தியாவின் வற்புறுத்தலுக்கு அமையவே ஜே.ஆர் விருப்பமற்ற வகையில் தமிழ் மொழியை இரண்டாம் அரச கருமமொழியாக கொண்டு வந்தார் என்று அமைச்சர் மனோகணேசன் சுட்டிக்காட்டினார்.

(Minister Mano Ganesan 21st Constitution amendment introduced)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites