womans husband murdered husband sexually assaulted police
பெற்ற மகளை பாலியல் இச்சைக்கு ஆளாக்கிய கணவனை போலீஸில் பிடித்துக் கொடுத்த கோபத்தில், பெண்ணின் கணவன் அவரை கோர்ட்டில் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்சாம் மாநிலத்தை சேர்ந்த புர்னா நாகர் தேகா என்ற கயவன் பெற்ற மகள் என்றும் பாராமல் அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் தன் கணவன் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனால் கணவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். பின் ஜாமினில் வெளியே வந்த அவனை மனைவி வீட்டில் அனுமதிக்க மறுத்துவிட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தன் மனைவியை கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தான். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அவனது மனைவி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
அப்பாவியான என் மீது பழி சுமத்தி போலீஸில் பிடித்துக் கொடுத்ததால் தான் அவளை கொலை செய்தேன் என புர்னா நாகர் தேகா வாக்குமூலம் அளித்துள்ளான்.
womans husband murdered husband sexually assaulted police
Tags: Edappiyar Ramalan greeting ramazan
<< மேலதிக இந்திய செய்திகள் >>
*காவிரியில் வெள்ளப்பெருக்கு: தமிழகத்துக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு! (முழு விபரம் உள்ளே)
*இந்தியாவில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்: விஞ்ஞானியின் அதிர்ச்சி தகவல்!
*தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம்!
*நாடு முழுவதிலும் ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்!
<< தமிழ் நியூஸ் இணைய தளங்கள் >>