சுவிஸில் இருந்து வந்த பெண்ணுக்கு இலங்கையில் இடம்பெற்ற அவலம்

0
1204
Sexual abuse Swiss woman traveled SriLanka

இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட சுவிஸ் நாட்டு பெண் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். (Sexual abuse Swiss woman traveled SriLanka)

குறித்த பெண், கித்துல்கல பகுதியில் வைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்றுள்ள போதிலும் தற்போதே தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கித்துல்கல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சுற்றுலா நிமிர்த்தம் குறித்த பகுதிக்கு சென்றிருந்த சுவிஸ் நாட்டு பெண் அந்தப் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
23 வயதான இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

tags :- Sexual abuse Swiss woman traveled SriLanka

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites