காஷ்மீரின் மூத்தப் பத்திரிக்கையாளர் சுஜாத் புஹாரியை சுட்டுக் கொன்றவர்கள் என்று சந்தேகப்படுபவர்களின் புகைப்படங்களை அம்மாநில காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.journalist killed! – police released image criminals
ஜம்மு- காஷ்மீர் மாநிலம் ஶ்ரீநகர் பகுதியிலிருந்து `ரைசிங் காஷ்மீர்’ பத்திரிகையின் ஆசிரியர் சுஜாத் புஹாரி காரில் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர்.இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். அவரின் பாதுகாவலர்கள் இருவர் காயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், புஹாரியை சுட்டவர்கள் என்று சந்தேகப்படுவர்களின் சி.சி.டி.வி கேமரா எடுத்தப் புகைப்படத்தை அம்மாநில காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில், மூன்று பேர் முகத்தை மூடிக்கொண்டு ஒரு பைக்கில் இருக்கின்றனர். அவர்களில் ஒருவன் கோணிப்பையில் ஏதோ ஒன்றை மறைத்துவைத்துள்ளான். அந்தப் புகைப்படத்தில் உள்ளவர்கள் குறித்து அடையாளம் தெரிந்தால் பொதுமக்கள் தகவல் அளிக்க வேண்டும் என்று காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
More Tamil News
- நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்களுக்கு தான் தோல்வி : டிடிவி தினகரன்!
- ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை மனு நிராகரிப்பு!
- தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை : தமிழக அரசின் தலைமை காஜி அறிவிப்பு!
- `அ.தி.மு.க ஆட்சியை மோடி பத்திரமாக காப்பாற்றி வருகிறார்’ – ஆ.ராசா காட்டம்!
- காவு வாங்கும் எடப்பாடி அரசு : சி.பி.எம் பிரச்சார கூட்டத்தில் தலைவர்கள் பேச்சு!
- கனிஷ்க்கின் 138 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!