பெருந்தோட்ட பகுதியில் சிறுவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் சிறுவர்களை பாதுகாக்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. (Demonstration child trafficking Agarapathana)
அக்கரப்பத்தனை நல்லதண்ணி தோட்ட சிறுவர்கள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் இணைந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று மாலை முன்னெடுத்தனர்.
நல்லதண்ணி தோட்ட கொழுந்து மடுவத்திற்கு முன்னால் 200 ற்கும் மேற்பட்டோர் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி தங்களின் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக பெருந்தோட்ட பகுதியில் உள்ள சிறுவர்கள் பாதுகாக்கப்படாமல் அவர்களுக்கு அச்சுறுத்தல் வரக்கூடிய சம்பங்களே அதிகமாக பதிவாகியுள்ளன.
சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் தற்கொலை, கடுமையான தண்டனை, சிறுவர்களை கடத்தல், விற்கப்படுதல், சட்ட முறையற்ற ரீதியில் சிறுவர்களை தத்தெடுத்தல், சிறுவர்களை தொழிலாளியாக பயன்படுத்துதல் போன்ற இன்னும் பல்வேறுப்பட்ட சிறுவர்களுக்கு துஷ்பிரயோகங்கள் இடம்பெற்று வருகின்றன.
இதனால் சிறுவர்கள் பாதிக்கப்படுவதோடு, எதிர்கால சந்ததியினர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலையே தோன்றியுள்ளது.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அக்கரப்பத்தனை மன்றாசி தோட்டத்தில் சிறுமி ஒருவரை அரசியல்வாதி ஒருவரின் ஒத்துழைப்புடன் கடத்தி விற்பனை செய்ததாக கூறி 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் சிறுவர்கள் தனிமையில் வெளியில் செல்ல முடியாத அளவிற்கு பயந்த நிலையில் இருப்பதும் காணக்கூடியதாக இருப்பதாகவும், மலையகத்தில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் கடத்தல் சம்பங்கள் இனிமேலும் வரக்கூடாது எனவும், கைது செய்யப்பட்ட நபர்களுக்கு உரிய தண்டனை நீதிமன்றத்தினால் வழங்கப்பட வேண்டும் என கோரி இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 1 மணித்தியாலயம் முன்னெடுக்கப்பட்டது.
tags :- Demonstration child trafficking Agarapathana
- ரணில் ஜனாதிபதி வேட்பாளரானால் யாருக்கும் பிரச்சினை வராது
- யாராவது பிறையை கண்டால் உடனே அறிவியுங்கள் : தொலைபேசி இலக்கம் இதோ..!
- காதர் மஸ்தானின் அமைச்சு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி :வர்த்தமானியில் அறிவிப்பு
- லோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார்?
- மன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு
- இளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்
- ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி
- அமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த
- நாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன
- வாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்!!
- வெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!
- முன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது?
- வடக்கு,கிழக்கில் இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகம்!