குற்றம் செய்த இராணுவத்தினரை காட்டிகொடுங்கள் : சி.வி. சினம்

0
1024
cv wigneswaran srilankan army

நாம் இர­ணு­வத்தைக் காட்­டிக்­கொ­டுக்­கப்­போ­கின்றோம் என்­றெல்லாம் கூறி­வ­ரு­கின்­றார்கள். ஆனால் உண்­மையில் இரா­ணு­வத்தில் பிழை­களைச் செய்­த­வர்­க­ளையே காட்­டிக்­கொ­டுக்­கு­மாறு நாம் கூறு­கின்றோம். அதற்­காக முழு இரா­ணு­வத்­தையும் காட்­டிக்­கொ­டுப்­பது என்று அர்த்தமல்ல. ஆகவே இதில் உண்மை என்பது எது பொய் என்பது எது என்ற அடிப்படைகளை அறியாமல் எம்மீது இருக்கின்ற காழ்புணர்ச்சிகளின் நிமித்தம் எமக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லிணக்கத்திற்கு ஏற்றதல்ல முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.(cv wigneswaran srilankan army)

வடக்கு மாகாண முத­ல­மைச்சர் அலு­வ­ல­கத்தில் இரா­ஜாங்க அமைச்சர் இரா­தா­கி­ருஷ்­ண­னுக்கும் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னுக்கும் இடையில் கலந்­து­ரை­யாடல் ஒன்று இடம்­பெற்­றது.
இக் கலந்­து­ரை­யா­டலைத் தொடர்ந்து ஊட­கங்­க­ளுக்கு முத­ல­மைச்சர் கருத்துத் தெரி­விக்கும் போதே இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் போரா­ளி­க­ளுக்கு வாழ்­வா­தார உத­வி­களை வழங்­கு­வது தொடர்பில் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நா­த­னால் கொண்­டு­வ­ரப்­பட்ட அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மா­னது மிகச் சரி­யா­னது.
அப்­பத்­தி­ரத்தை ஜனா­தி­பதி நிரா­க­ரிப்­பது மனித உரி­மை­க­ளுக்கு அப்­பாற்­பட்ட அதற்கு எதி­ரான செயற்­பாடு ஆகும்.

புலிகள் இறந்து விட்­டார்கள் என்று அர­சாங்கம் கூறிக்­கொண்­டி­ருக்கும் நிலையில் அவ் அமைப்பில் அங்­கத்­த­வர்­க­ளாக இருந்­த­வர்­க­ளுக்கு வாழ்­வா­தா­ரங்­களைக் கொடுக்­காமல் விடு­வது மனித உரி­மை­க­ளுக்கு அப்­பாற்­பட்ட எதி­ரான ஒரு செயற்­பா­டாகும்.

அமைச்சர் சுவா­மி­நாதன் கொண்­டு­வந்த அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மா­னது மிகச் சரி­யா­ன­தாகும். அதற்­கேற்­ற­வாறு அர­சாங்கம் உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கா­மை­யா­னது மிகவும் பிழை­யான ஒரு நட­வ­டிக்­கை­யாகும்.

tags :- cv wigneswaran srilankan army
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites