தனிமையில் இருந்த நபர் கொலை; சந்தேக நபர் தப்பியோட்டம்

0
423
43 year old found murdered home Wellawaya

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹந்தபானாகல வெஹரயாய பிரதேசத்தில் நபரொருவர் தாக்குதல் நடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். (43 year old found murdered home Wellawaya)

வெல்லவாய பொலிஸாருக்கு இன்று காலை கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின்படி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

ஹந்தபானாகல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய கரவிட வெதகே ஜகத் புஷ்பகுமார என்பவரே தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வீட்டில் தனிமையில் இருந்த போது கொலை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், கொலைக்கான காரணமோ சந்தேக நபரோ இதுவரை இனங்காணப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

tags :- 43 year old found murdered home Wellawaya
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites