20 அடி உயரப் பனை மரத்திலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த யாழ். உடுப்பிட்டியைச் சேர்ந்த 53 வயது நபரொருவர் சிகிச்சை பலனளிக்காது நேற்றைய தினம் ( 14) உயிரிழந்துள்ளார். (20 feet falling palm person commits suicide)
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபர் நேற்று முன்தினம் புதன்கிழமை(13) தனது வீட்டுக்கு அருகிலுள்ள 20 அடி பனைமரத்தில் ஏறி அதிலிருந்து குதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பனைமரத்திலிருந்து விழுந்து படுகாயமடைந்த குறித்த நபர் அவரது உறவினர்களால் காப்பாற்றப்பட்டுப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் யாழ் – போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் முன்னரும் பல தடவைகள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
யாழ். உடுப்பிட்டி இமையாணன் பகுதியைச் சேர்ந்த சின்னையா அன்பரசு ( வயது-53) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
tags :- 20 feet falling palm person commits suicide
- ரணில் ஜனாதிபதி வேட்பாளரானால் யாருக்கும் பிரச்சினை வராது
- யாராவது பிறையை கண்டால் உடனே அறிவியுங்கள் : தொலைபேசி இலக்கம் இதோ..!
- காதர் மஸ்தானின் அமைச்சு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி :வர்த்தமானியில் அறிவிப்பு
- லோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார்?
- மன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு
- இளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்
- ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி
- அமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த
- நாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன
- வாள்வெட்டுக் குழுவை விரட்டிய இளைஞர்கள் – பொலிஸாரைக் கண்டதும் வாள்களைப் போட்டுவிட்டு ஓட்டம்!!
- வெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!!
- முன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது?
- வடக்கு,கிழக்கில் இழப்பீடுகளை வழங்குவதற்கான அலுவலகம்!