எருமை மாடுகளை ஏற்றிச்சென்ற இஸ்லாமியர்கள் அடித்துக்கொலை

0
801
Two Muslim Men killed Stealing Cattle Lynched Jharkhand

(Two Muslim Men killed Stealing Cattle Lynched Jharkhand)

ஜார்கண்ட் மாநிலத்தில் விற்பனைக்காக எருமை மாடுகளை ஏற்றிச்சென்ற இரண்டு இஸ்லாமியர்கள் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள குட்டா மாவட்டத்தில் 13 எருமை மாடுகளை கொள்வனவு செய்து கொண்டு சிராபுதின் அன்சாரி மற்றும் முர்தாஸ் அன்சாரி ஆகிய இரண்டு இஸ்லாமியர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர்.

பன்னட்டி கிராமம் அருகே வாகனத்தை இடைமறித்து நின்ற கால்நடை பாதுகாவலர்கள் எனக் கூறப்படும் சிலர், இரண்டு இஸ்லாமியர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

மேலும், இரண்டு பேரையும் கயிற்றில் கட்டி சாலையில் இழுத்துச் சென்று அடித்துக் கொலை செய்துள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து கொலையில் தொடர்புடைய 4 பேரை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்தாண்டு ஜூன் மாதம் 29 ஆம் திகதி வேனில் மாட்டுக் கறி ஏற்றிச் சென்றதாகக் கூறி அலீமுத்தின் அன்சாரி என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Two Muslim Men killed Stealing Cattle Lynched Jharkhand)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites