கண்டியில் 67 வருடங்களான அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த வயோதிப பெண்ணொருவரை பொலிஸார் மீட்டுள்ளனர். (policeman elderly woman Kandy 67 years old)
7 வயதில் இருந்து 67 வருடங்களாக வீட்டின் கூடாரத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை, பொலிஸார் நேற்று முன்தினம் மீட்டுள்ளனர்.
ஒழுங்காக உணவு, நீர் இன்றி தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் தொடர்பில் நபர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அவர் மீட்கப்பட்டுள்ளார். மாவவெல்ல, மொல்லிகொட பிரதேசத்தை சேர்ந்த இந்த வயோதிப பெண்ணை மீட்க பொலிஸார் சென்ற போது, அவர் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். உடனடியாக மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அடைக்கப்பட்ட பெண் திருமணமாகாத 75 வயதான முத்துமெனிக்கே என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பெற்றோரிடம் இருந்து பிரித்து 7 வயதில் மாவனெல்ல பிரதேத்திற்கு அழைத்து வந்த போதிலும் அவருக்கு கல்வி கற்க அனுமதிக்காமல் வீட்டு வேலை செய்ய விடப்பட்டுள்ளார். திருமணமும் செய்து வைக்காமல் பெண் ஒருவருக்கு வழங்கப்பட வேண்டிய எந்தவொரு வசதியும் அவருக்கு வழங்கப்படவில்லை. அறைக்குள் அடைக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள பொலிஸார் முயற்சித்த போதிலும், அவரால் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு பெண்ணின் இந்த நிலைமைக்கு காரணமானவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
tags :- policeman elderly woman Kandy 67 years old
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- “மைத்திரிக்கு சித்தபிரமை” சிவாஜிலிங்கம் சீற்றம்
- இலங்கையில் அறிமுகமாகிறது யூரோ – 4 எரிபொருள்!!
- இந்து கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள்: மறவன்புலவு சச்சிதானந்தன்
- பணம் பெற்ற 50 பேரின் பெயரை வெளிப்படுத்தியுள்ளேன் : ரஞ்சன்
- தனியார் வைத்தியர்கள் அரசாங்கத்திற்கு விடும் எச்சரிக்கை!!
- ‘சம்பத் கொலை’ : பயங்கரமான சம்பவமாகும் : மூடிமறைக்க வேண்டாம் : மஹிந்த
- கனடாவில் காணாமல் போன இலங்கை தமிழர் : தேடும் பணிகள் தீவிரம்
- பிரான்சில் பக்தர்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம்..!!!
- விடைபெறும் அமெரிக்க தூதுவர் : விருந்தளித்தார் மைத்திரி
- சந்துருவானை நாடு கடத்துமாறு கோரவில்லை : ஜனாதிபதி மறுப்பு
- ஆறு பேருக்கு இன்று அமைச்சு பதவி : ரவிக்கும் வழங்கப்படுகின்றதா?
- கோத்தபாய வேண்டாம் : அமெரிக்கா நேரடியாக தெரிவிப்பு : அதிர்ச்சியில் மஹிந்த குடும்பம்