நேற்று(ஜூன் 11) பிரான்ஸ் பிரதமர் எட்வர்ட் பிலிப் மற்றும் பெல்ஜிய பிரதமர் சார்லஸ் மைக்கல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். France PM discuss Belgium prime minister
பிரான்ஸிலே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதுடன், அதன் போது தீவிரவாதிகளுக்கு எதிராக இருநாடுகளும் இணைந்து செயற்படுதல் தொடர்பாக இருநாட்டு அரச தலைவர்களும் தமது உள்நாட்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.
இவ்விருநாட்டு பாதுகாப்புச் சேவைகளும் ப்ரஸல்ஸ், பாரிஸ் மற்றும் நைஸ் தாக்குதல்கள் தொடர்பில் உள்நாட்டு விமர்சனங்கள் மட்டுமல்ல வெளிநாட்டு விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்தது.
இந்நிலையில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் சிரியா மற்றும் ஈராக் போர்மண்டலத்திலிருந்து திரும்பிய சிறுவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கவும் தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடவும் இருநாடுகளும் ஆழமான கூட்டுமுயற்சி உடன்படிக்கை செய்துகொண்டன.
மேலும், 2015 இல் இஸ்லாமிய தீவிரவாத குழு என அழைக்கப்படும் IS பாரிஸ் மீது நடத்திய தாக்குதலில் 130 பேரும், ப்ரஸல்சில் நடத்திய தாக்குதலில் 32 பேரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- புயலிலிருந்து தப்பிய மோட்டார் சைக்கிளோட்டி – பிரான்ஸில் சம்பவம்!
- இடி மற்றும் மழையுடனான கால நிலை நீடிக்கும் – எச்சரிக்கின்றது கால நிலை அவதான நிலையம்