டிப்பருடன் மோதிய முச்சக்கரவண்டி – 3 உயிர்களை காவு கொண்ட அனர்த்தங்கள்

0
1225
tamilnews kurunegala galewala massive accident three died

(tamilnews kurunegala galewala massive accident three died)

தம்புள்ளை – குருணாகலை பிரதான வீதியில் கலேவெல – புவக்பிட்டி பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு விபத்துகளில் மூவர் உயிரிழந்தனர்.

ஒரு விபத்தில் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்த இராணுவ சிப்பாய்கள் இருவர் டிப்பர் வாகனத்துடன் மோதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த அனர்த்தத்தில் பிறிதொருவர் படுகாயமடைந்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் பயணித்த இராணுவ சிப்பாய்கள் இருவரும் யட்டிகல்பொத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் இருவரும் விடுமுறைக்காக வந்திருந்ததாகவும், ஒருவர் சமித் மதுரங்க ஏகநாயக்க (22) மற்றும் சுப்புன் கல்ஹாச ராஜதிலக்க (22) எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தியத்தலாவை ராணுவ முகாமில் அவர்கள் பயிற்சி பெற்று வந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த இரண்டு சிப்பாய்களின் சடலங்கள் கலேவெல மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காயமடைந்த மற்றைய நபர் குருணாகலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டிப்பர் வாகனத்தின் சாரதி சந்தேககத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை பிறிதொரு சம்பவம் தம்புள்ளை பிரதான வீதியி்ன் கனாதன பிரதேசத்தில் இடம்பெற்றதுடன், மோட்டார் சைக்களில் ஓட்டுனர் ஒருவர் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் மின்சார கம்பத்தில் மோதுண்டு உயிரிழந்தார்.

பலியானவர் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரண்டு சம்பவங்களுக்கும் கவனக் குறைவே காரணம் என பொலிஸாரின் ஆரம்ப விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

(tamilnews kurunegala galewala massive accident three died)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites