பிரான்ஸ் குடிமகன் ஒருவர் ரியாத், மக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. France man suicide Mecca’s grand Mosque
இஸ்லாமியர்களின் புனித தளங்களில் ஒன்று மக்கா மசூதி. இந்த இடத்தை பார்க்க உலகமெங்கிலும் இருக்கும் இஸ்லாமியர்கள் வருடம்தோறும், அதிலும் முக்கியமாக நோன்பு காலத்தில் புனித பயணம் மேற்கொள்வார்கள்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை, மக்கா மசூதியிலிருந்து கீழே விழுந்து பிரான்ஸ் குடிமகன் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் பெயர் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இவரது தற்கொலைக்கான காரணமும் தெரியவில்லை. இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவற்துறை மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து இவர் பிரான்ஸ் குடிமகன் என்பது மட்டும் தெரியவந்துள்ளது.
மக்கா மசூதியின் உச்சியில் ஏறிய இவர், அப்படியே கீழே மக்கள் சுற்றிவரும் இடத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கீழே விழுந்த நேரத்தில், சம்பவ இடத்திலேயே இவர் உயிர் பிரித்துள்ளது. இந்த சம்பவம் நோன்பு மாதமாகையால், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் பயணிகளின் பிரச்சினைகளை குறைப்பதற்கு புதிய நடவடிக்கை!
- பிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்!
- தமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நிய தேசம்.!
- அவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது!
- இந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..!