ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நிலவிய முரண்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. president mathripala srisena prime minister ranil wickramasinghe again
குறித்த இருவருக்கும் இடையில் இரண்டு மணித்தியால பேச்சுக்கள் இடம்பெற்றதாகவும் அதனை தொடர்ந்து குறித்த தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் பிரதமருக்கு எதிராக பல கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அவருக்கு தங்காலை செல்ல ஹெலிகொப்டர் தாம் வழங்கவில்லை என்பதோடு,
100 நாள் வேலை திட்டம் தொடர்பிலும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை தொடர்ந்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கிடையில் பல்வேறு முரண்;பாடுகள் தோற்றம் பெற்றன.
இந்நிலையில், தேசிய அரசாங்கத்தின் முக்கியத்துவம் குறித்து சமரசத்துடன் செயற்பட விரும்பும் மகிந்த சமரசிங்க, சரத் அமுனுகம, மகிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க ஆகிய நான்கு அமைச்சர்களும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களான மங்கள சமரவீர மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாசிம் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடிதன் பின்னர், பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கிடையிலான சந்திப்பினை ஏற்பாடு செய்தனர்.
இந்நிலையிலேயே இருவருக்கும் இடையிலான முரண்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், 2020 வரை அரசாங்கத்தை எவ்வாறு கொண்டு செல்வது என்பது தொடர்பிலும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
president mathripala srisena prime minister ranil wickramasinghe again
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
- உலகையே அதிரவைத்த இலங்கை இளைஞருக்கு கிடைத்த தண்டனை!
- முஸ்லிமாக மாறிய ரஞ்சன் ராமநாயக்க (video)
- சாதி வெறி..! யாழில் JCP வாகனம் கொண்டு தேர் இழுத்த அவலம் : போட்டு தாக்கும் தமிழர்கள்
- தொழுகைக்கு சென்ற இரு இளைஞர்கள் பலி : தெஹிவளையில் சோகம்
- பலாங்கொடையில் சினிமா பாணியில் நடந்த திருமணம் : என்ன நடக்கின்றது என தெரியாமல் திகைத்த மக்கள்
- இளஞ்செழியனின் உயிருக்கு “ஆபத்து ஆபத்து” : நீதிமன்றில் கூச்சலிட்ட இளைஞனால் பதற்றம்
- தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை கொழும்பில் அமைக்கிறது சீனா.!
- சொக்லெட் என நினைத்து மருந்தை உட்கொண்ட சிறுவன் பலி : மஸ்கெலியாவில் சம்பவம்
- புனித மாதத்தில் கிண்ணியாவில் நடந்த அவலம் : ஒற்றை கேள்வியால் உயிரை விட்ட மனைவி
- திருகோணமலை “ஹபாயா” விவகாரம்! : பொங்கியெழுந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை
- உயிராபத்தான குத்துச் சண்டையில் வெற்றியீட்டிய ஈழத் தமிழன்
Tamil News Group websites