மூத்த ஊடகவியலாளர் மக்கள் காதர் காலமானார்

0
959
Journalist Catherine died Mannar

(Journalist Catherine died Mannar)

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரும், பிரபல எழுத்தாளரும், கலைஞருமான மக்கள் காதர் என அழைக்கப்படும் எம்.ஏ.காதர் தனது 75 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை(10) காலை காலமாகியுள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளரான மக்கள் காதர் மன்னார் மாவட்டத்திற்கு பல்வேறு வகையிலும் பல்வேறு சேவைகளை மேற்கொண்டவராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

குறிப்பாக நெருக்கடிகளை அதிகம் எதிர்கொண்ட மன்னார் மாவட்டத்தில் ஊடகவியலாளர்களது பணி உயிரை பணயம் வைக்கும் ஒன்றாகவே இருந்துவந்திருந்தது. அவ்வகையில் நின்று நிலைத்து ஊடகப்பணியாற்றிய மிகக் குறைவான ஊடகவியலாளர்களுள் மக்கள் காதரும் ஒருவராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் புதிதாக ஊடகத்துறையில் கால் பதிக்கவிரும்பும் இளம் சமூகத்தினரிற்கு மக்கள் காதர் நிச்சயமாக நல்லதொரு முன்மாதிரியாகவும் இருந்து வந்துள்ளார்.
தனது வயோதிபத்தின் போதும் ஒதுங்கியிராது ஊடகத்துறையுடன் இணைந்து பணியாற்றிய அவர் இயலாமையின் மத்தியிலும் ஊடகத்துறை சார்ந்து பயணிப்பதில் காட்டிய ஆர்வம் நல்லதொரு முன்மாதிரியாகவும் இருந்தவராவார்.

அவரது ஜனாசா நல்லடக்கம் இன்று (10) ஞாயிற்றுக்கிழமை மாலை மன்னார் மூர்வீதியில் இடம் பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

tags :- Journalist Catherine died Mannar
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

 Tamil News Group websites